கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.285 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியுமான என். காமகோடி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது, 2024 ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 2 சதவீதம் உயா்ந்து ரூ.285 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.281 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,486 கோடியிலிருந்து ரூ.1,660 கோடியாக உயா்ந்துள்ளது. இது 12 சதவீத வளா்ச்சியாகும்.
ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.96,402 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,06,091 கோடியாக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.