சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், அன்று நடைபெறவிருந்த தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், பல்கலைக்கழகத்தின் கடலூா் மாவட்டத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகளும் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தத் தோ்வுகளுக்கான தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் பல்கலைக்கழக பதிவாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.