சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஜானிக் சின்னர் சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றின் நம்பர் 1 வீரரான ஜானின் சின்னர் (இத்தாலி), ஆண்ட்ரே ரூப்லவ் (ரஷியா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் முதல் செட்டை ரூப்லெவ் கைப்பற்றிய நிலையில், அடுத்த இரு செட்டுகளை சின்னர் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆட்டத்தில் சின்னர் 4-6, 7-5 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் போராடி கைப்பற்றி வெற்றி பெற்றார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்