சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பெகுலா இறுதிப்போட்டியில் சபலென்கா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

சின்சினாட்டி,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), பாலா படோசா (ஸ்பெயின்) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் முதல் செட்டை பெகுலா கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை படோசா கைப்பற்றினார். இதற்கடுத்து நடைபெற்ற 3-வது செட்டை எளிதில் கைப்பற்றி பெகுலா வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் பெகுலா 6-1, 3-6 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா