சிம்பு – 49 படத்தின் இயக்குநர் இவரா?

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இதையும் படிக்க: மறுவெளியீட்டில் 1000-வது நாள்! விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை!

தொடர்ந்து, சிம்பு இரண்டு நாள்களுக்கு முன் தன் எக்ஸ் தள பக்கத்தில் , ”தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 – 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்திருந்தார்.படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6.06 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ’ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 49-வது படத்தை இயக்குகிறாராம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!