விழுப்புரம்: நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் , வி.சாலை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டுக்கு அந்த கட்சியின் 4 மணியளவில் தொண்டர்களின் ஆரவார கோஷத்துக்கு மத்தியில் மிகவும் உற்சாகமாக மேடைக்கு வந்த விஜயை பார்த்த தொண்டர்கள் வீசிய தவெக கட்சி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தொண்டர்களின் நோக்கி கையசைத்தப்படி மோடைக்கு வந்தடைந்தார்.
இதையும் படிக்க |தவெக மாநாடு: நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடை!
இதனிடையே மாநாட்டில் கூடியிருக்கும் தொண்டர்களின் உற்சாகத்தை கண்டு கண்கலங்கினார் விஜய்.
பின்னர் மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்து சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளின்படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.
இதனைத் தொடர்ந்து தவெக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.