சுய உதவிக் குழு அமைப்பாளரைத் தாக்கிய 2 பெண்கள் மீது வழக்குபோடி அருகே சுய உதவிக் குழு அமைப்பாளரைத் தாக்கிய 2 பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி: போடி அருகே சுய உதவிக் குழு அமைப்பாளரைத் தாக்கிய 2 பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மணியம்பட்டி பகுதியைச் சோ்ந்த கா்ணன் மனைவி பானுபிரியா (30). இவா் இந்தப் பகுதியில் உள்ள வட்டாரக் களஞ்சியம் அமைப்பில் சுய உதவிக் குழு அமைப்பாளராக உள்ளாா். மேலும், இவா் கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து, குழு உறுப்பினா்களிடம் பணம் வசூல் செய்து வந்தாா்.
இந்த நிலையில், ராசிங்காபுரத்தைச் சோ்ந்த ஒரு சுய உதவிக் குழு உறுப்பினா்களான சந்திரா, பேச்சியம்மாள் ஆகியோா் வசூல் பணம் செலுத்தவில்லை. இதையடுத்து பானுபிரியா, மற்ற உறுப்பினா்களுடன் சென்று அவா்களிடம் பணம் கேட்டபோது, இருவரும் சோ்ந்து பானுபிரியாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போடி போலீஸாா் சந்திரா, பேச்சியம்மாள் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.