சுழல் காற்று எதிரொலி: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி: குமரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா தென் தமிழக கடல் பகுதிகளில் சுழல் காற்றானது 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழையுடன், பலத்த கடற்காற்று வீசக்கூடும். குமரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா தென் தமிழக கடல் பகுதிகளில் சுழல் காற்றானது 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

வெற்றி பெற்றால் குழந்தை தருகிறேன்: எலான் மஸ்க்

இதையடுத்து மீன்வளத்துறை அறிவுறுத்தலின் படி தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிப்பில் இருக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 260-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதுபோன்று திரேஸ்புரம், இனிகோ நகர், புதிய துறைமுக கடற்கரை, வேம்பார், தருவைகுளம், பெரியதாழை, மணப்பாடு ஆகிய பகுதிகளில் இருந்து குறைவான அளவிலே நாட்டுப் படகுகள் கடலுக்கு சென்றுள்ளன.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!