செங்டு ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி

இறுதிப்போட்டியில் யூகி பாம்ப்ரி – அல்பனோ ஒலிவெட்டி ஜோடி , சாடியோ டொம்பியா – பேபியன் ரிபோல் ஜோடியுடன் மோதியது.

பீஜிங்,

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி , பிரான்சின் சாடியோ டொம்பியா – பேபியன் ரிபோல் ஜோடியுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-6, 6-4 , 4-10 என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வியடைந்தது . சாடியோ டொம்பியா – பேபியன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்