செந்தில் பாலாஜி ஜாமின் மனு – சுப்ரீம்கோர்ட்டு ஒத்திவைப்பு

புதுடெல்லி,

அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அபய்.எஸ்.ஓகா தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது. அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள 3 வழக்குகளையும் விசாரிப்பீர்களா..? என்று அமலாக்கத்துறைக்கு சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அனைத்தும் விசாரிக்கப்படுவதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை தனியாக விசாரிக்கப்போவதில்லை என எடுத்துக்கொள்ளலாமா..? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமலாக்கத்துறை அளித்த பதில்களை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு ஒத்தி வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு