சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை: ஆவடி யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால் சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு அதிகாலை 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், செப்.20, 21, 22 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட உள்ளது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – சென்னை சென்ட்ரலுக்கு செப்.20, 21 ஆகிய தேதிகளில் இரவு 10.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி – சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – சென்னை சென்ட்ரலுக்கு 20, 21, 22 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – ஆவடி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த தகவல் சென்னை ரயில்வேகோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

கல்லணை கால்வாயில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற உதவி ஆய்வாளர் உயிரிழப்பு