சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில் பாமக கட்சிக்கு எதிராக திமுக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.(கோப்புப்படம்)

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து ரயில் நிலையங்களில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் ரயில் நிலையங்களில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.

அவா்களது உடைமைகளும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில் பாமக கட்சிக்கு எதிராக திமுக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகவே பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து வருகிறது.

இந்த மிரட்டலால் முழு வீச்சில் தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன. தேடுதல் பணிகளுக்குப் பிறகு அத்தகைய மிரட்டல்கள் வெறும் புரளி என கண்டறியப்படுகின்றன.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி