சென்னையில் ஆவின் பால் விநியோகம் முடங்கும் அபாயம்

சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் 4.20 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும், மாதவரம் பால்பண்ணையில் 4.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ளது. ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி இல்லாத காரணத்தால் பால் கொண்டு செல்லும் வாகனங்கள் மாதவரம் பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 2 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய தினசரி பால் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆவின் பால் விநியோகம் முற்றிலும் முடங்கியது. காலை 7 மணி வரை வெளியூர் செல்ல வேண்டிய வாகனங்கள் புறப்படவில்லை, இதன்பிறகு உற்பத்தி செய்யப்பட்டால் காலை 11 மணிக்கு பிறகே விநியோகம் செய்ய முடியும் என்று பால் முகவர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொளத்தூர், மீஞ்சூர், வியாசர்பாடி, மணலி, எண்ணூர், புரசைவாக்கம், பெரம்பூர், சூளைமேடு, பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய 2 லட்சம் லிட்டர் ஆவின் பால் இன்று முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!