சென்னை உள்பட 7 மாவட்டங்களில், இன்று(அக்.16) இரவு 8.30 மணி தொடங்கி, நாளை(அக்.17) காலை 8.30 மணி வரையிலான அடுத்த 12 மணி நேரத்துக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி,
-
திருவள்ளூர்
-
சென்னை
-
காஞ்சிபுரம்
-
செங்கல்பட்டு
-
ராணிப்பேட்டை
-
வேலூர்
-
திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக். 16) மாலை 5.30 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கு திசையில் 190 கி.மீ. தூரத்திலும், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூருக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு இடையே வியாழக்கிழமை(அக்.17) அதிகாலை கரையைக் கடக்க அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.