சென்னையில் நாளை முதல் விதிமீறல் பதாகைகளை அகற்றும் பணி தொடக்கம்

விதிமீறல் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில், நாளை முதல் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து நாளை முதல், விதிமீறல் விளம்பர பதாகைகளை மாநகராட்சி பணியாளர்களே அகற்றும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!