சென்னையில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னையில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளது. இதனால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் – அரக்கோணத்துக்கு ஆக.19, 21 ஆகியதேதிகளில் காலை 9.10 மற்றும் 11 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் – திருத்தணிக்கு ஆக.19, 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு புறப்படும் மின்சாரரயில், திருவள்ளூர் – திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. அரக்கோணம் – சென்னை சென்ட்ரலுக்கு ஆக.19, 21 ஆகிய தேதிகளில் காலை 11.15, நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் – திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 19, 21 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி – திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட் – அரக்கோணத்துக்கு ஆக. 19, 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சித்தேரி – அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு ஆக.19, 21 ஆகிய தேதிகளில் காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் – திருத்தணி பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்