சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை: அடுத்த 3 மணி நேரம் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக மாநகரில் நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் சென்னையின் பல்லாவரம் உள்பட சுற்றுவட்டார புறநகர்ப் பகுதிகளில் காலை 8 மணி தொடங்கி அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பதிவு: சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது. இதில், சென்னை புறநகர்ப் பகுதியான சோழிங்கநல்லூரில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. அடையாறில் 10 செ.மீ, திருவொற்றியூரில் 9 செ.மீ., கொளத்தூரில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்