சென்னை – அரக்கோணம் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை – அரக்கோணம் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் பொறியியல் பணிநடக்கவுள்ளதால் 8 மின்சார ரயில்களின் சேவையில் இன்று (ஆக.7) மாற்றம் செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல் – அரக்கோணத்துக்கு இன்று காலை 9.10, 11.00 மணிக்கு புறப்படும்மின்சார ரயில்கள், திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் – திருத்தணிக்கு இன்று காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் – திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

அரக்கோணம் – சென்னை சென்ட்ரலுக்கு இன்று காலை 11.15, நண்பகல் 12.00 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் – திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு இன்று நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்,திருத்தணி – திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட் – அரக்கோணத்துக்கு இன்று காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சித்தேரி – அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு இன்று காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் – திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்தத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்