சென்னை எழும்பூர் -நாகர்கோவில் சிறப்பு ரெயில்கள் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு

அதேபோல் திருநெல்வேலி- எழும்பூர் சிறப்பு ரெயில்ககளும் நீட்டிக்கப்பட்டுள்ளது

சென்னை,

தெற்கு ரெயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு எழும்பூருக்கு புறப்படும் சிறப்பு ரெயிலும் (எண்: 06070) மறுமாா்க்கத்தில் எழும்பூரில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் ரெயிலும் (எண்: 06069) ஜூன் 6-ந் தேதி முதல் ஜூன் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேபோல், நாகர்கோவில்-சென்னை எழும்பூா் இடையே இயங்கும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 06019/06020) கேரள மாா்க்கமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது.

அதன்படி, நாகா்கோவிலில் இருந்து ஜூன் 9, 23 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரெயில் எழும்பூருக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு வந்தடையும்.மறுமாா்க்கமாக ஜூன் 10, 24 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே வழியாக மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது – சசிகலா

தமிழகத்தில் வழங்கப்பட்ட முத்ரா கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – செல்வப்பெருந்தகை கோரிக்கை