சென்னை காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள்

விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். அந்த வகையில், இன்று வார விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே மீன்கள் வாங்குவதற்காக காசிமேட்டில் குவிந்த மக்கள், தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி வருகின்றனர். வஞ்சிரம், வவ்வால், பால் சுறா, திருக்கை, பாறை, ஷீலா, சங்கரா உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. மக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்