சென்னை சென்டிரல் – அரக்கோணம் மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேர ரத்து

சென்னை,

சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (29-ந்தேதி) மதியம் 2.40 மணி முதல் மாலை 6.40 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.40, 1.25 மாலை 3.50, 4.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, அரக்கோணத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) மாலை 3.40, 4.50, 6 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம் – திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) மதியம் 2.15, மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் – திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருத்தணியிலிருந்து இன்று மற்றும் நாளை மாலை 3.45, 5, 6.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் திருத்தணி – திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து இன்று மற்றும் நாளை மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, அரக்கோணத்தில் இருந்து இன்று மற்றும் நாளை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் அரக்கோணம்- திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்