சென்னை – திருத்தணி இடையே ரயில் சேவையில் மாற்றம்

சென்னை – திருத்தணி இடையே ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல் – திருத்தணி இடையே செப். 16, 18 ஆகிய தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அரக்கோணம் – ஜோலார்பேட்டை மார்க்கத்தில் அரக்கோணம் யார்டில், ரயில்வே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சென்னை – திருத்தணி இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் – திருத்தணிக்கு செப். 16, 18 ஆகிய தேதிகளில் காலை 10, முற்பகல் 11.45 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், அரக்கோணம் – திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு செப். 16, 18 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.35, பிற்பகல் 2.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட உள்ளன.

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்