சென்னை நந்தனம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை!

சென்னை: சென்னை நந்தனம், சிஐடி நகர் அருகே, குப்பைத் தொட்டியில், பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை யாரோ வீசிச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் 4 வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது.

அப்போது அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் குப்பைத் தொட்டி அருகே சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது.

உடனடியாக கலியபெருமாள் அருகில் உள்ள சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

90% பேரால் பதில் சொல்ல முடியாத ஹார்வர்டு பல்கலை.யின் கேள்வி!

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சிசிடிவி காட்சி

மேலும் சைதாப்பேட்டை போலீசார் அங்கு இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது இளம்பெண் ஒருவர் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி