சென்னை நுங்கம்பாக்கம் சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பெயரை அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 25) உத்தரவிட்டார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள காம்தார் நகர் முதல் தெருவிற்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயர் சூட்டப்படும் என முதல்வர் அறிவித்தார்.