சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!காலையில் வெயில் வாட்டிவந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கோப்புப் படம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் வாட்டிவந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை அண்ணாநகர், முகப்பேர், நெற்குன்றம், கோயம்பேடு, வளசரவாக்கம், கே.கே. நகர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மாங்காடு, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை (ஜூலை 7 மற்றும் 8) தமிழகத்தில ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுனும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது.

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து