சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

மழை காரணமாக சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, வடபழனி, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!