சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை

தமிழகத்தில் இன்று முதல் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 18-ந் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, பூந்தமல்லி, குரோம்பேட்டை, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!