சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்னை,

சென்னையில் நேற்று பகல் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் பகலில் அதிகம் இருந்த நிலையில், நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ராயப்பேட்டை, ஈக்காட்டு தாங்கல், அசோக்நகர், எழும்பூர், சென்டிரல், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!