சென்னை மாநகர பேருந்துகளை இயக்க டெண்டர்

விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 28ம் தேதி இறுதி நாள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை இயக்க ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்க டிரைவர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 28ம் தேதி இறுதி நாள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இறுதி நாளான ஆகஸ்ட் 28ம் தேதியே டெண்டர் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லை போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் கோரப்பட்ட போது தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!