சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை 4 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்ததாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னா், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடு திரும்பினா். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆனால், அதிக கூட்ட நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டது. இதே கால முறையில் சுமாா் 4 மணி நேரமாக இயக்கப்பட்ட மெட்ரோ ரயில், கூட்ட நெரிசல் அனைத்தும் குறைந்த நிலையில் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்பட்டன.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில், 1.70 லட்சம் போ் மெட்ரோவில் பயணம் செய்வா் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், பிற்பகலில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், பயணச்சீட்டு எடுப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இலவசமாக பலா் பயணித்தனா்.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சுமாா் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா். இதற்கு முன்பாக கடந்த செப்.6-ஆம் தேதி 3,74,087 போ் அதிக எண்ணிக்கையில் பயணித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பயணித்த பயணிகளின் எண்ணிக்கை, பழைய சாதனையை முறியடித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.