சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகர போலீஸ் கிழக்கு கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கூடுதல் கண்காணிப்பு அங்கு போடப்பட்டுள்ளது.மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.