சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பா.ஜ.க. நிர்வாகி கைது!

சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பா.ஜ.க. நிர்வாகி கைது!சென்னையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

சென்னையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த பா.ஜ.க. நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

புரசைவாக்கத்தைச் சேர்ந்த பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்டச் செயலாளரான குணசேகரன், ஆந்திரத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து குணசேகரன் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 4 கிலோ கஞ்சா மற்றும் எடைபோடும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்தச் சோதனையில் விஜய், ரகு ஆகியோர் மூலம் குணசேகரன் கஞ்சா விற்று வந்தது உறுதியான நிலையில், பாஜக நிர்வாகியான குணசேகரன் உள்பட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு