செப்.9 வரை வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், திண்டுக்கல்லில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்(மதுரை), திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு விவரம்:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயில் திருவிழா ஆக.29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில் வியாழக்கிழமை (ஆக. 29) முதல் செப்டம்பா் 9-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமாா் 60 சிறப்புப் பேருந்துகள் திண்டுக்கல்லிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து திண்டுக்கல்லுக்கும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்