செய்திகள் சில வரிகளில்……

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.

* நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது. அதே நேரம் தேர்வு மையம் வாரியாக, நகரம் வாரியாக தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வுகள் முகமைக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

* சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

* இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சத்தை தொட்டது

* தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* சீனாவில் வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

* உலக ஜூனியர் ஸ்குவாஷ்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சவுரியா

* வேட்டி அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

Karnataka: Mysuru Lokayukta Police Register Case Against CM Siddaramaiah & Wife MB Parvathi In MUDA Land Scam

Aishwarya Rai Touches ‘Guru’ Mani Ratnam’s Feet, Hugs Him Before Presenting Award At IIFA Utsavam (VIDEO)

Kart Flips With Its ‘Bewakoof’ Sale Punch Line