செய்திகள் சில வரிகளில்……

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

* ஆகஸ்ட் 15-ந் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

* வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை அளிக்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.

* காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

* புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தும் 3 பேருக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 408 ஆக உயர்ந்துள்ளது .வனப்பகுதியில் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

* நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் மோடி 10ம் தேதி வயநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

* சிறுபான்மை மக்களை குறிவைத்து வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

* ஜப்பானில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Karnataka: Mysuru Lokayukta Police Register Case Against CM Siddaramaiah & Wife MB Parvathi In MUDA Land Scam

Aishwarya Rai Touches ‘Guru’ Mani Ratnam’s Feet, Hugs Him Before Presenting Award At IIFA Utsavam (VIDEO)

Kart Flips With Its ‘Bewakoof’ Sale Punch Line