‘செல்லம்மா’ சீரியல் வாழ்க்கை கொடுத்தது… நடிகை உருக்கம்!

செல்லம்மா தொடர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கு வாழ்க்கை கொடுத்ததாக அத்தொடரின் நாயகி அன்ஷிதா அக்பர்ஷா உருக்கம் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகிவரும் செல்லம்மா தொடர் இந்த வார இறுதியுடன் நிறைவடையவுள்ளது. இதன் இறுதிக்கட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இறுதிக் கட்ட காட்சிபடப்பிடிப்பின்போது சக நடிகர், நடிகைகளைப் பிரிவதை எண்ணி, நாயகி அன்ஷிதா கண்ணீர் பெருக அவர்களை ஆரத்தழுவினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், செல்லம்மா தொடர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கு வாழ்க்கை கொடுத்ததாக நடிகை அன்ஷிதா தெரிவித்துள்ளார்.

இறுதிநாள் படப்பிடிப்பில் குழுவினருடன் அன்ஷிதா

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அன்ஷிதா,

''இதனை மிகுந்த உருக்கத்துடன் எழுதுகிறேன். தமிழில் எனக்கு வாழ்க்கை கொடுத்தது செல்லம்மா தொடர்தான். இந்தத் தொடர் எனக்கு மிகவும் நெருக்கமானது. இந்தத் தொடரினுடைய வெற்றி என்னைச் சார்ந்தது மட்டுமல்ல, எங்கள் ஒட்டுமொத்த அணிக்கானது. இந்த நேரத்தில் நான் எனது நன்றியை அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். செல்லம்மாவாக என்னைத் தேர்வு செய்து, ஒரு நடிகையாக என் திறமையை நிரூபிக்க வாய்ப்பளித விஜய் தொலைக்காட்சிக்கும், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டூடியோவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறப்பாக கதை எழுதி என்னுடைய திறமைக்கு சவாலான பாத்திரத்தைக் கொடுத்த சாகுல் சாருக்கு என்றுமே நன்றிக்கடன்பட்டுள்ளேன். தமிழில் என் முதல் குருவாகவும், வழிகாட்டியாகவும் இருந்த இயக்குநர் கதிரவன் பிரான்சிஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் ரமேஷுக்கு நன்றி.

படப்பிடிப்பு தளத்தை வீட்டில் இருப்பதைப் போன்று உணர வைத்த என் உடன் நடித்த நடிகர், நடிகைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னை மிகவும் பிரகாசமாகக் காட்டும் அண்ணன்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது.

இறுதியாக, அன்புள்ள கண்மணியே (குழந்தை நட்சத்திரம்) என் கண்ணின் மணியாக என்றுமே நீ இருப்பாய். என் முதல் குழந்தை. என் இளம் தோழி. பிரியா அக்காவுக்கு நன்றி, எனக்கு இரண்டாவது அம்மாவாக நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் இதேபோன்றே என் வாழ்வில் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.

13 ஆண்டு காதல்… சின்னத்திரை நாயகனுக்குத் திருமணம்!

குழந்தைகள், அர்ணவ் உடன் அன்ஷிதா

இறுதியாக என்னுடைய பார்வையாளர்களுக்கும் செல்லம்மா தொடருக்கு அவர்கள் கொடுத்த அன்பு மற்றும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என உருக்கமாக அன்ஷிதா பதிவிட்டுள்ளார்.

செல்லம்மா தொடர்

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு செல்லம்மா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் அர்ணவ் மற்றும் அன்ஷிதா பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இத்தொடர் கடந்த மே 2022 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரத்துடன் முடிவடையவுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்