சேலம்- மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகளால் சேலம்- மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி சேலம்- மயிலாடுதுறை மெமு விரைவு ரெயில் (வண்டி எண்.16812) இன்றும், நாளையும் பிற்பகல் மதியம் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு கரூரை வந்தடையும். கரூர்- மயிலாடுதுறை இடையே சேவை இருக்காது. அதே நேரத்தில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்றும், நாளையும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் கரூரில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும். வண்டி எண் 16812 என்ற ரெயில் நின்று செல்லும் அதே நிறுத்தங்களில் இந்த சிறப்பு ரெயில் நின்று செல்லும்.இதேப்போல் திருச்சி- ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண். 06809) வழக்கமாக திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!