சொத்து தகராறில் வாலிபர் கழுத்தை நெரித்து கொலை – தந்தை, தம்பி கைது

சொத்து தகராறில் வாலிபரை தந்தையும், தம்பியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையா (60 வயது). இவருக்கு சுரேஷ் (30 வயது) ரமேஷ் (27 வயது) என்ற 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இதில் கார்த்திகை செல்விக்கு வீடு கட்டுவதற்காக கண்ணையா இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார். இதனை அறிந்த சுரேஷ் நேற்று முன்தினம் இரவு கண்ணையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கண்ணையா, இளைய மகன் ரமேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சுரேசை தாக்கி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கொலையுண்ட சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணையா, ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சொத்து தகராறில் வாலிபரை அவருடைய தந்தையும், தம்பியும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!