ஜம்மு- காஷ்மீர் மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'ஜம்மு-காஷ்மீர் சகோதர, சகோதரிகளே, இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு அங்கு நடைபெறுகிறது.
வரலாற்றில் முதன்முறையாக, ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இது உங்கள் அனைவரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயல். ஜம்மு-காஷ்மீரை அவமதிக்கும் செயல்.
ஜம்மு- காஷ்மீர் தேர்தல்: 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவு!
இந்தியாவுக்கான உங்களின் ஒவ்வொரு வாக்கும் உங்கள் உரிமைகளை மீட்டெடுக்கும், வேலைவாய்ப்புகளை கொண்டுவரும், பெண்களை வலிமையாக்கும், அநீதியான உலகத்தில் இருந்து உங்களை வெளியே கொண்டுவரும், ஜம்மு- காஷ்மீரை செழிப்பாக மாற்றும்.
எனவே, நீங்கள் அனைவரும் வெளியே வந்து உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!
முதல் கட்டத் தேர்தல்
ஜம்மு – காஷ்மீரில் 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு – காஷ்மீர் மக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.