ஜனநாயக நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முடியாது – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி,

ஒரே நாடு ஒரே தேர்தல் ' திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தநிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். நடைமுறைக்கு மாறானது. ஜனநாயக நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முடியாது. ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமெனில் தேவைக்கேற்ப தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்