ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர், பாரமுல்லாவின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுடன் இன்று அதிகாலை சிறிது நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை: பிரேமலதா

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அப்போது துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களாக, தோடா மற்றும் உதம்பூரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி யூனியன் பிரதேசத்தில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!