ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் நடந்த வெவ்வேறு என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலையொட்டி தோடாவில் பாஜக சார்பில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் .

இப்பொதுக்கூட்டத்தை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்துவதை உறுதி செய்ய தோடா மற்றும் கிஷ்துவார் ஆகிய இரட்டை மாவட்டங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதனிடையே கதுவாவில் வெள்ளிக்கிழமை நடந்த மற்றொரு என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட பங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கிஷ்துவாா் மாவட்டத்தின் நைத்காம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது 2 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

2 வீரா்கள் படுகாயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து