ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்!

விரைவில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்!

ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க ஆளுநரை சந்தித்து ஹேமந்த் சோரன் உரிமை கோரியுள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன், முதலமைச்சராக இருந்த போது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனால், தனது பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார், இதனை தொடர்ந்து அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். 5 மாதங்களாக சிறையில் இருந்த ஹேமந்த் சோரன், கடந்த மாதம் 28-ஆம் தேதி ஜாமினில் வெளியேவந்தார்.

விளம்பரம்

இந்நிலையில், ராஞ்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் அம்மாநிலத்தின் இந்தியா கூட்டணி எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இதில், சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

nw_webstory_embed
மேலும் செய்திகள்…

இதனிடையே, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து முதலமைச்சர் சம்பாய் சோரன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க ஹேமந்த் சோரன் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளதால், விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Cm
,
Hemant Soren

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்