ஜியார்ஜியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு – 4 பேர் பலி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஜியார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் , அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்ததாகவும் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் பள்ளி மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சில ஆண்டுகளாகவே பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்