டானா புயல்: 28 ரயில்கள் ரத்து!

டானா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(அக். 23), நாளை மறுநாள்(அக். 24) மற்றும் அக். 26 ஆம் தேதி இயக்கப்பட இருந்த ரயில் சேவைகளை கிழக்கு கடற்கரை ரயில்வே ரத்து செய்துள்ளது.

வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸா மற்றும் மேற்கு வங்க கடற்கரை இடையே புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு நடுவே தீவிரப் புயலாக வலுப்பெற்று அக். 25 அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

East Coast Railway has notified cancellation of following train services as a safety measure due to #CycloneDana
Please refer NTES/IRCTC or other official railway Websites/Apps for any further updates.#SouthernRailway#CycloneInOdisha#CycloneUpdatepic.twitter.com/ips2sY6qFT

— Southern Railway (@GMSRailway) October 22, 2024

28 ரயில்கள் ரத்து

புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களும், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காரக்பூர் – விழுப்புரம் அதிவிரைவு ரயில், ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், ஹௌரா – திருச்சி அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 28 ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி