டிசம்பரில் அனைவரும் ஒன்றிணைவார்கள்- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

டிசம்பரில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இருக்கின்ற அதிமுக தொண்டர்கள் 100 சதவீதத்தில் 99.9 சதவீத தொண்டர்கள் அதிமுக இணைய வேண்டும், 2026 எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆட்சி கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார்கள்.

பேரவைத் தலைவர் அப்பாவு பிற்பகலில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அந்த எண்ணத்தை நிச்சயமாக ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆத்மா நிறைவேற்றும் என நம்புகிறோம். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களே இயக்கத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்.

பொங்கல்! ரயில் டிக்கெட் முன்பதிவு சில நாள்களில் தொடங்குகிறது!

இது காலத்தின் கட்டாயம் என்றார். ஒற்றைத் தலைமை – இரட்டை தலைமை என்பது இணையும் போது ஒரு முடிவுக்கு வரும். 2025 டிசம்பருக்குள் நல்ல முடிவு ஏற்படும். எடப்பாடி பழனிசாமி 20 சதவீதம் ஓட்டு வரும் அளவிற்கு இந்த இயக்கத்தை மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

அதனால் அதிமுகவை அழித்து விடுவார் என்ற எண்ணத்தில் டிடிவி கூறியிருப்பார். சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், எடப்பாடி என அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். டிசம்பரில் அனைவரும் ஒற்றுமை ஆவார்கள். 2026 அதிமுக ஆட்சி தான் என்றார்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்