டி.என்.பி.எல். : திண்டுக்கல் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சு தேர்வு

முதல் மூன்று கட்ட லீக் ஆட்டங்கள் சேலம், கோவை, நெல்லையில் நடந்தது.

சென்னை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி என் பி எல்) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் மூன்று கட்ட லீக் ஆட்டங்கள் சேலம், கோவை, நெல்லையில் நடந்தது.

இந்த நிலையில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மதுரை கேப்டன் ஹரி நிஷாந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related posts

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்