டி20 உலகக் கோப்பையை வெல்வோம்; ஹர்மன்பிரீத் கௌர் நம்பிக்கை!

டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் முதலில் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. பின்னர், அங்கு நிலவும் அமைதியின்மை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட பல்வேறு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடர்களில் முக்கியமான நேரத்தில் எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெற விரும்புகிறேன்: சூர்யகுமார் யாதவ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியது கிடையாது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆடுகளங்களின் தன்மை இந்திய ஆடுகளங்களைப் போன்றே இருக்கப் போகிறது என நினைக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப விரைவில் எங்களை மாற்றிக் கொள்வோம் என்றார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்