டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

குவாலியர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

குவாலியரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த வங்காளதேச அணி டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. அதேவேளையில் இந்திய அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் விளையாட உள்ளது.

Related posts

பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் டேனியல் மெத்வதேவ்