டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதே போல் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் எம்.பி., ரவிக்குமார் எம்.பி., ஆகியோர் பங்கேற்றனர். மேலும் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனிடையே நாளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் குரல் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்